search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது

    கரூர் :

    கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு முன்னிலையில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனமான ஆக்ஸ் கன்சல்டன்சியுடன் இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணலின் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கவும், மேலும் கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் ஆக்ஸ் கன்சல்டன்சி நிறுவன இயக்குனர்கள் இந்து மற்றும் வெங்கடேஷ், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு, கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×