search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு
    X

    லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு

    • கிருஷ்ணராயபுரம் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு
    • பணம் பறித்து சென்ற குப்பாச்சிபட்டியை சேர்ந்த வாலிபர் கைது

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் பகுதியில் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, உள்ள முடக்கு சாலை பகுதியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம், காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் திருமூர்த்தி(வயது 51). கடந்த 18ம் தேதி லாரியை நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளார்.அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திருமூர்த்தியை மறித்து கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித் துக்கொண்டு டூவீலரில் தப்பினர்.இதுகுறித்து, திருமூர்த்தி கொடுத்த புகாரின் படி, மாயனுார் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பணம் பறித்த பாப்பகாப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் சதீஷ்குமார், (23), குப்பாச்சிப்பட்டியை சேர்ந்த நந்த குமார், (21) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×