search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் - கூட்டுறவு கல்வி திட்டம், விழிப்புணர்வு முகாம்
    X

    கரூர் மாவட்டத்தில் - கூட்டுறவு கல்வி திட்டம், விழிப்புணர்வு முகாம்

    • மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.
    • இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கரூர்

    மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.

    இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு முகாமில் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கூட்டுறவு வார விழா வருடா வருடம் நவம்பர் மாதம் 14 முதல் 20-ந்தேதி வரையில் எதற்காக கொண்டாடப்படுகிறது, நவம்பர் 14-ம் தேதியில் குழந்தைகள் தினத்தன்று ஏன் தொடங்கி நடைபெறுகிறது எனவும், கூட்டுறவில் என்னென்ன வகையான சங்கங்கள் உள்ளது எனவும்,ஆவின் பாலில் உள்ள சத்துக்கள் குறித்தும்,கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் ஏன் உறுப்பினர்களாக சேரவேண்டும் எனவும், உறுப்பினர்களாக சேர்வத னால் உறுப்பினர்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் என்ன எனவும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக யார்யார் எல்லாம் சேரலாம் எனவும், உறுப்பினர்களாக சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்க ளில் அதன் உறுப்பினர்க ளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதனால் சங்கத்திற்கு கிடைக்கக்கூடிய லாபம் கூட்டுறவு சங்கங்களில் சட்டம் மற்றும் விதிகளின் படி சங்க உறுப்பினர்களுக்கே பிரித்து வழங்கப்படுகிறது எனவும்,18-வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் எனவும் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சங்க உறுப்பினர்க ளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு முகாமில், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்திருப்பதி வரவேற்புரையாற்றினார்.கள அலுவலர் நீலாவதி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் விழிப்புணர்வு முகா மில் கலந்துகொண்டார்கள்.

    Next Story
    ×