கரூர் பகுதியில் தொடர் ஆடு திருட்டு

கரூர் பகுதியில் தொடர் ஆடு திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் பகுதியில் தொடர் ஆடு திருட்டு
Published on

கரூர்:

கரூர் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் ஐந்து முதல் 10 ஆடுகள் வரை வளர்த்து விவசாயம் சார்ந்த தொழிலாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் திருமாநிலையூர் அருகே ஆடு வளர்க்கும் பொதுமக்கள், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை, பக்கத்து பகுதியில் வசிப்பவர்கள் கார் மற்றும் ஆட்டோகளில் வந்து ஆடுகளை திருடிச் செல்வதாக தெரிகிறது. இதுகுறித்து திருமாநிலையூர் பகுதி பொது மக்கள் தாந்தோணிமலை போலீசாரிடம் ஆடு திருடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தான்தோன்றிமலை போலீசார் சந்தேகப் பட்டு 2 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com