search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
    X

    இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

    டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதி யில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோ தனை முகாம் நடைபெற்றது.

    ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த னர். ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோத னை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னை களை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    பொதுமக்கள் கீரை, காய்கறிகள் போன்ற சத்தா ன உணவுகளை அதிக அள வில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். பொது மக்கள் பாது காப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×