போலி நகைகளை அடகு வைத்து மோசடி - கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. . அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலி நகைகளை அடகு வைத்து மோசடி - கைதான 3 பேர்  சிறையில் அடைப்பு
Published on

கரூர்,நவ

கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 42), அவரது மனைவி செல்வி (45) ஆகியோர் பெரம்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணி (71), திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (68) ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுதமன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் ஜவகர் பஜாரில் காரில் வந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3 போலி தங்க காயின், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணி, சந்திரசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

கைதான 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com