காகித ஆலை நிறுவனம் சார்பில் காசோலை வழங்கல்

புகழூர் நகராட்சி திட்ட பணிகளுக்காக காகித ஆலை நிறுவனம் சார்பில் காசோலை வழங்கல்
காகித ஆலை நிறுவனம் சார்பில் காசோலை வழங்கல்
Published on

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி நிர்வாக திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் சமூக நலத்துறை (சி.எஸ்.ஆர்), நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் முயற்சியினால், புகழூர் நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலையை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் , நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் ஆகியோரிடம் செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (மனிதவளம்)கலைச்செல்வன், முதுநிலை மேலாளர்( மனிதவளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) ராஜா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் காகித ஆலை,நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com