search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
    X

    5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

    • 5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிககு ரா.கேசவன், மொடக்கூர் மேற்கு ஊராட்சி 5- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.வீரமணி, குளித்தலை ஊராட்சி ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.சுதா, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் கருப்பம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.சாந்தி, பள்ளபாளையம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆ.கருணாகரன் ஆகியோர் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இன்று (ஜூலை 9) க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கிரு ஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரியபாளையம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை யக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×