கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா

383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா
Published on

கருமத்தம்பட்டி,

கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான 383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேர்த்திருவிழாவை யொட்டி நாள்தோறும் பல்வேறு சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடை பெற்றது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுப்பிரார்த்தனை நேற்று காலை நடந்தது.

அதை தொடர்ந்து மாலையில் புனித அன்னை ஜெபமாலை திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேர் திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்

X

Maalai Malar
www.maalaimalar.com