search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு
    X

    ராகுல்காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு

    • காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • ட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதையடுத்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர தலைவர் ஜாண் வெர்ஜின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னோஷிஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், தங்க நாடார், வட்டார செயலாளர்கள் வக்கீல் ராஜேஸ், ராஜாதாஸ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொன்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேரூராட்சி விவசாய பிரிவு தலைவர் வினு, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஜாண் போஸ்கோ, ஓ.பி.சி. பிரிவு தலைவர் அபினேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனிஷ் ராஜ், வார்டு தலைவர் சுஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்நகர் காமராஜர் பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் திங்கள் நகர் பேரூர் துணை தலைவர் ரீத்தம்மாள், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜூமோன், தக்கலை ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, ஜேக்கப் அருள்பால், தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப் புக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பி னர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்.துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×