search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் குடிபோதையில் மயங்கி கிடந்தவரின் நகையை திருடினேன்
    X

    வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் குடிபோதையில் மயங்கி கிடந்தவரின் நகையை திருடினேன்

    • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    • சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தக்கலைஅருகே கீழ மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (வயது 50). இவர் சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் கீழமூலச்சலில் வசிப்பதால் அடிக்கடி அவர் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    அதன்படி ஊருக்கு வந்த சகாயராஜன், தக்கலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் போதையில் அ ங்கேயே மயங்கி விழுந்து விட்டார். அப்போது அவரது கையில் அணிந்து இருந்த 20 பவுன கைச்சங்கி லியை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுபற்றி சகாயரா ஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப் பதிவு செய்தார்.போலீசார், சகாயராஜன் தூங்கிய போது யாராவது அவருடைய பக்கத்தில் சுற்றி வந்தார்களா? எனவிசாரித்தனர்.

    இதில் ஒரு வாலிபர் சந்தே கப்படும்படியாக சுற்றி திரிந்ததாக அங்குள்ள கடைக்காரர் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் படி சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்தனர். அந்த வாலிபரை பிடித்து விசாரி த்த போது அவரிடம் சகாயராஜனுக்கு சொந்தமான கைச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தக்கலை மக்காயி பாளையம் பகுதியை சேர்ந்த செய்யது முகம்மது (28) என்பதும், இறைச்சி வியா பாரி என்பதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் மதுகுடிக்க டாஸ்மாக் கடைக்கு சென்றேன். அப்போது அருகில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் மது போதையில் ஒருவர் படுத்திருந் ததை பார்த்தேன். அவர் கையில் தங்க கைச்சங்கிலி அணிந்திரு ந்ததை பார்த்து அதனை திருடலாம் என முடிவு செய்தேன். அதன்படி நைசாக அதனை கையில் இருந்து பறித்து விட்டு தப்பி விட்டே ன். பின்னர் அந்த நகையை விற்க முயன்றபோது சிக்கி விட்டேன் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, தன்மீது அடிதடி வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருகிறது. அதற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்தேன். கைச்சங்கிலியை அடகு வைத்து கிடைக்கும் பணத்தில் வழக்கை நடத்த முடிவு செய்திருந்தேன் என்றும் கூறினார்.இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து 20 பவுன் கைச்சங்கிலியை மீட்டனர்.

    Next Story
    ×