கன்னியாகுமரி-வேளாங்கண்ணி நேரடி ரெயில்: தெற்கு ரெயில்வேயிடம் விஜய் வசந்த் கோரிக்கை

திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இரணியல் ரெயில் நிலைய மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி-வேளாங்கண்ணி நேரடி ரெயில்: தெற்கு ரெயில்வேயிடம் விஜய் வசந்த் கோரிக்கை
Published on

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே துறை பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

இரணியல் ரெயில் நிலையம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த அந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com