search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மகனை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
    X

    தக்கலை அருகே மகனை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

    • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
    • மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 40). எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெ னியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஜீவா (7) என்ற மகன் இருந்தார்.

    பெங்களூரில் வசித்து வந்த தம்பதியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் தக்கலை யில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறி யுள்ளனர். முரளிதரனும் ஐ.டி. கம்பெனி பணியை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணி யாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதையடுத்து சைலஜாவின் தந்தை கோபால் மகளை கூப்பிட்டு பார்த்தார். ஆனா லும் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கத வின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறி யில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் காணப்பட்டனர். பேரன் ஜீவா முகத்தில் பாலித்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    தகவல் அறிந்து துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட முரளிதரன் எம்.இ., பி.எல். முடித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    திருமணத்துக்கு பிறகு மனைவி சைலஜா உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு மகன் பிறந்தான். அவனுக்கு ஜீவா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்துள்ளனர்.

    முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவி யின் சொந்த ஊரான தக்க லைக்கு குடி பெயர்ந்துள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன்-சைலஜா தம்பதியருக்கு மகன் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்தது மன வேதனையை ஏற்படுத்தியது. பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்து வர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்க மடைய செய்து அவரது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா அறையில் தனது மகன் கட்டிலில் கிடந்த அந்த அறையிலேயே மின் விசிறியி லும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்

    Next Story
    ×