search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை பூச்சந்தையில் பிசுபிசுத்த ஓணம் விற்பனை
    X

    தோவாளை பூச்சந்தையில் பிசுபிசுத்த ஓணம் விற்பனை

    • பூக்களை வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் கவலை
    • பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்கிறது

    ஆரல்வாய்மொழி :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் மாவேலி மன்னனை வரவேற்க வீட்டின் முன் அத்தப்பூ கோலமிட்டு ஓன சத்தியா விருந்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வருகிற 29-ந் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை துவங்கிய நாள் முதல் தோவாளை பூச்சந்தைக்கு குவியும் கேரளா மக்களால் வியாபாரம் படுஜோராக நடக்கும்.

    இந்த ஆண்டு தலைகீழ் ஓணம் துவங்கிய மூன்றா வது நாள் ஆனால் வியாபாரம் இல்லை. ஒரு கிலோ மல்லிகைப்பூ 300 ரூபாய்க்கும், ஒரு தாமரை 12 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 500, சேலத்துஅரளி 170, தோவாளை அரளி 140, கொழுந்து 80, மஞ்சள் கேந்தி 50, சிவப்பு கேந்தி 60 மரிக்கொழுந்து 120, என பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது.

    தோவாளை பூச்சந்தைக்கு வெயிலின் காரணமாக பூக்கள் அதிக அளவில் வந்துள்ளது. ஆனால் கேரளா மக்கள் வருகையில்லாததால் பூக்கள் விலை குறைந்து வாங்க ஆளில்லை. இதனால் வியாபாரிகள் சோகம் அடைந்துள்ளனர்.

    மேலும் கேரளாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதாலும், மக்களிடையே ஓணம் கொண்டாடுவதில் ஆர்வம் குறைவதாலும், அதைவிட முக்கியம் பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்வதாலும், தோவாளை பூச்சந்தையில் வியாபாரம் குறைந்து வெறிச்சோடி இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×