search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சப்-கலெக்டர் ஆய்வு
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சப்-கலெக்டர் ஆய்வு

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து கும்பாபிஷேக பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கொடிமரத்துக்கு மாட்டுவதற்கு தயார் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், அதிவாசம்விடர்த்தி, உஷபூஜை, உச்சபூஜை, அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காணி மடம் மந்திராலயம் யோகிராம் சூரத்குமார் அவர்களின் காணி ஞானி நாமரிஷி தபஸ்வி பஜனை நடை பெறுகிறது.

    நேற்று மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை வந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பாதைகள், அன்னதானம் நடைபெறும் இடம், பக்தர்கள் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறநிலையத்துறை என்ஜினியர் ராஜ்குமார், கோவில் கண்காணிப்பாளர் ஆணந்த் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோவிலில் மாட்டப்படும் கண்காணிப்பு கேமராக்கள், பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவட்டார் பேரூராட்சி மூலம் தினமும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி ஆகியவற்றையும் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் காலை மாலை வேளைகளில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மை படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், செயல் அலுவலர் மகராஜன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    கோவில் தந்திரி சஜித்சங்கரநாராயணகுரு மற்றும் அவருடன் பொறுப்பில் இருந்த சுப்ரமணியகுருவிற்கும் குடும்ப சூழல் காரணமாக பூஜைகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில் தந்திரி அவகாசம் கொண்ட வஞ்சியூர் அத்தியற மடத்தை சார்ந்த கோகுல்தந்திரி இரவு பொறுப்பேற்று கொண்டார் அவரின் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    Next Story
    ×