search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

    • கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது

    கன்னியாகுமரி :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படு கிறது.

    இதையொட்டி வருகிற 17-ந்தேதி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஓவிய போட்டியும், கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்ப டுகிறது.இந்த போட்டிகள் அனைத்தும் அன்று காலை 10 மணிக்கு தொடங்கும். இந்த போட்டிகளில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் காலை 9.30-க்குள் தங்களின் பெயர்களை கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். எழுதுவதற்கும், வரைவதற்கும் தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப்பொருட்களும், வைத்து எழுதுவதற்கு தேவையான அட்டையும் மாணவர்களே கொண்டு வரவேண்டும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்துகொண்ட அனை வருக்கும் சன்றிதழ்களும் வழங்கப்படும். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×