search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான பொக்லைன் உபகரணங்கள் மூலம் சுகாதாரப் பணிகள்
    X

    புதிய எந்திரங்களை மேயர் மகேஷ் தொடங்கி வைத்த காட்சி.

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான பொக்லைன் உபகரணங்கள் மூலம் சுகாதாரப் பணிகள்

    • மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்
    • புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்தவும், சாக்கடை அள்ளவும் பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.

    இந்த நிலையில் மாநகராட்சிக்கு புதிய பொக்லைன், கிட்டாச்சு மற்றும் மினி கிட்டாச்சு ஆகியவை வாங்கப்பட்டு உள்ளது. 15-வது மத்திய நிதி குழுமத்தின் கீழ் ரூ.37.10 லட்சத்தில் பொக்லைன் எந்திரம், ரூ.46.94 லட்சத்தில் கிட்டாச்சு எந்திரம் மற்றும் ரூ.24.09 லட்சத்தில் மினி கிட்டாச்சு எந்திரம் ஆகி யவை வாங்கப்பட்டு உள்ளன.

    இந்த எந்திரங்கள் தொடக்க நிகழ்ச்சி மாநக ராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பங்கேற்று புதிய எந்தி ரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், "நாகர்கோவில் மாந கராட்சியை தூய்மை யாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்த தூய்மைப் பணிக்காக பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்தி ரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

    எனவே புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் சர்வீஸ் செய்ய வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், கவுன்சிலர்கள் முத்துராமன், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×