search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு கடல் அலையில் சிக்கிய சிறுவன் உள்பட 4 பேர் மீட்பு
    X

    மண்டைக்காடு கடல் அலையில் சிக்கிய சிறுவன் உள்பட 4 பேர் மீட்பு

    • பக்தர்களின் பாதுகாப்புக்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்
    • அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர் கள் வந்து பொங்க லிட்டு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் அவர்கள் அங் குள்ள கடற்கரைக்கு சென்று கால் நனைப்பது வழக்கம்.

    நேற்று நாகர்கோவிலில் மருந்து கடை நடத்தி வரும் பிரமுகர் ஒருவர் தனது குடும்பத்தினர் மற்றும் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுடன் மண்டைக்காடு கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் சாமி தரிசனம் முடிந்து கடற்கரைக்கு சென்றனர்.

    அங்கு கடலில் கால் நனைத்து கொண்டிருக்கும் போது திடீரென எழுந்த ராட்சத அலை 3 பெண்கள் மற்றும் 13 வயது சிறுவன் உள்பட 4 பேரை இழுத்து சென்றது. அலையில் சிக்கிய அவர்கள் உயிர் கடல் நீரில் தத்தளித்தபடி கூச்சலிட்ட னர். இதனை பார்த்த புதூர் மீனவர்கள் டேனியல், ஜாண்பால், சிலுவையடிமை, அந்தோணி மற்றும் சிலர் கடலில் குதித்து அனை வரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் சென்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் மண்டைக்காடு கோவிலுக்கு தற்போது பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். அவர்கள் கடற்கரைக்கும் வந்து செல்கின்றனர். ஆனால் கடற்கரையில் போதுமான பாதுகாப்பு இல்லை. இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பல வருடங் களாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் தும் எந்த விதமான நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மீனவர்கள் மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி இங்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×