search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொது கூட்டம்
    X

    குலசேகரத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொது கூட்டம்

    • சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவித்தால் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து போட்டியிடுவேன்
    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ பேச்சு

    திருவட்டார் :

    அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. திருவட்டார் கிழக்கு ஒன்றியம் சார்பாக குலசேகரம் சந்தை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ராஜ் வரவேற் றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர்உசேன், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய சுதர்ஷன், துணை செயலாளர் அண்ணா, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பிரதீப்குமார், பேரூர் செய லாளர்கள் மோகன்குமார், விஜுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மாநில பேச்சாளர் தீக்கனல் லெட்சு மணன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்த லில் தலைமை கழகம் அறிவித்தால் பத்மநாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.

    ஆவின் நெய் தற்போது 110 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதனை குறைக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். இந்த தொகுதிக்கு எந்த ஒரு பெரிய திட்டங்களும் கொண்டு வரவில்லை.

    குலசேகரத்தில் செயல் பட்டு வந்த ரப்பர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் தீ பற்றி எரிந்தது அதில் உறுப்பினராக இருக்கும் ரப்பர் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை பெற்று கொடுக்கவில்லை. குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் எங்கேயும் பசுமையை காணவில்லை.

    ஊழல் செய்த அமைச்சர் ஒருவர் விசாரணை கைதியாக சிறையில் இருக்கிறார். அவரை அமைச்சராக நிர்வாகத்தில் வைத்திருப்பது நல்லது அல்ல. ஆனால் தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது அமலாக்க துறை, மணல் குவாரிகளில் ரெய்டு செய்து கொண்டிருக்கிறது. அரசு ரப்பர் கழகம் விரை வில் மூடும் நிலைமைக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவ குற்றாலம், பேச்சிப் பாறை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி துணை செய லாளர் அன்சார், திருவட் டார் மேற்கு ஒன்றிய பொரு ளாளர் ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலை இலக்கிய அணி பொருளாளர் எல்ஜின் நன்றி கூறினார்.

    Next Story
    ×