search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரிக்கு புதிதாக ரெயில் இயக்க வேண்டும்
    X

    கன்னியாகுமரிக்கு புதிதாக ரெயில் இயக்க வேண்டும்

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்:

    சென்னையில் விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகியோரை சந்தித்து மனு ஒன்று அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை வழி ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும். ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×