இரணியல் அருகே பெண் வியாபாரி திடீர் மாயம்

25-ந் தேதி தெரிந்த நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிய தங்கம், அதனை வீட்டில் வைத்தார்இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் வியாபாரி தங்கத்தை தேடி வருகிறார்.
இரணியல் அருகே பெண் வியாபாரி திடீர் மாயம்
Published on

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மரிய ராஜேந்திரன். இவரது மகள் தங்கம் (வயது 37). திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், இளநீர் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 25-ந் தேதி தெரிந்த நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிய தங்கம், அதனை வீட்டில் வைத்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த பணத்தை திடீரென காணவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கம் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது சகோதரி பெருவிளையை சேர்ந்த செல்வி (46) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் வியாபாரி தங்கத்தை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com