search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

    • 10 நாட்கள் நடக்கிறது
    • வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்ம ன்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவரா த்திரி திருவிழா நடைபெறு வது வழக்கம் அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவருகிற15-ந்தேதி தொடங்குகிறது. 24-ந்தேதி வரை 10நாட்கள்தொடர்ந்து நடக்கிறது

    .1-ம்திருவிழாவான15-ந்தேதி காலை 7-45 மணிக்கு மேல் 8- 45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும் காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11- 30 மணிக்கு அலங்கார தீபாராதனையு ம்மதியம்12 மணிக்கு சிறப்பு அன்ன தானமும் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவும் இரவு பாட்டுக் கச்சேரி நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி களும்நடக்கிறது.திருவிழா நாட்களில்10நாட்களும் இரவு8-30மணிக்குஅம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    1-ம் திருவிழா வான15-ந்தேதிமுதல்3-ம் திருவிழா வான17-ந்தேதி வரை இரவு 8-30 மணிக்கு அம்மன் வெள்ளி க்கலை மான் வாக னத்திலும் 4-ம்திருவிழாவான18-ந்தேதி முதல்6-ம்திருவிழா வான20-ந்தேதி வரைஇரவு8-30மணிக்கு அம்மன் வெள்ளிக்கா மதேனு வாகனத்திலும்எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.7- ம் திருவிழா வான21-ந்தேதிஇரவு8-30மணிக்கு வெள்ளி இமய கிரி வாகனத்திலும் 8-ம் திருவிழா வான 22-ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    9-ம் திருவிழா வான23ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழா வான24-ந் தேதி கால10-30 மணிக்குமேல்10-45மணிக்கு ள்அலங்கார மண்டபத்தில்அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி க்கும் நிகழ்ச்சி நடக்கி றது. அதை தொடர்ந்து மதியம்1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளி க்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகா னந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாகமாலை6மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில்5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டதிருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன்நாயர், ஜோதிஷ்குமார், சுந்தரி நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த்மற்றும்கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் சங்கத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×