மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்நள்ளிரவில் படார் என்று சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மளமளவென தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்துள்ளது.
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் அஜய் சிங் (வயது 20), கட்டிட தொழிலாளி.

இவர் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் படார் என்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்த அஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தார் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மளமளவென தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்துள்ளது.

தீயை அணைக்கும் முன்பு மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமானது.

இதுகுறித்து அஜய் சிங் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் மோட்டார் சைக்கிள் எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என்றும், ஏதேனும் மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com