search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மேம்பாலம் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள் - வாலிபர் படுகாயம்
    X

    இரணியல் அருகே மேம்பாலம் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள் - வாலிபர் படுகாயம்

    • ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார்
    • சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதைக்காக நெய்யூர்-பரம்பை மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறி வருகின்ற னர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மணவாளக்கு றிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாரா தவிதமாக மேம்பால த்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகையை கவனிக்க தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×