search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே மினி பஸ் டிரைவருக்கு அடி - உதை
    X

    கோப்பு படம் 

    மார்த்தாண்டம் அருகே மினி பஸ் டிரைவருக்கு அடி - உதை

    • 3 பேர் மீது வழக்கு
    • படுகாயம் அடைந்தவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர் வாழைப்பிலாவிளையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சிராயன்குழி வழியாக சென்ற கிறிஸ்தவ ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பிரகாசை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜோபின் உட்பட 3 பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×