search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் மார்க்கெட் கட்டுமான பணிகள் 2 மாதத்திற்குள் தொடங்கப்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
    X

    மார்த்தாண்டத்தில் மார்க்கெட் கட்டுமான பணிகள் 2 மாதத்திற்குள் தொடங்கப்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

    • 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப் பதிக்கும் பணி நடந்ததை தொடர்ந்து அனைத்து ரோடுகளும் பழுத டைந்து காணப்படு கிறது. நகராட்சி சார்பில் ஒவ்வொரு சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை கோர்ட் முதல் பெருந்தெரு வரை, கழுவன்திட்டை சந்திப்பு முதல் இடத்தெரு வரை, பெருந்தெரு முதல் மீன் மார்க்கெட் வரை, பன்னியாணி முதல் வடக்கு தெரு வரை, வார்டு நம்பர் 13 க்கு உட்பட்ட பன்னியாணி சாலை, சிறியக்காட்டுவிளை சானல் சாலை, இடவிளாகம் மிட்ஸ் அலுவலக சாலை ஆகிய 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    இதைப்போல் 6-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் 16-ம் வார்டுக்குட்பட்ட சிறிய காட்டுவிளை சாலை, 6-ம் வார்டுக்கு உட்பட்ட மகாதேவர் கோயில் மேட்டு கிராமம் சாலை, 17-ம் வார்டுக்கு உட்பட்ட பன்னியாணி கிளை சாலை, 14-ம் வார்டுக்குட்பட்ட கொல்லங்குளம் வடக்கு தெரு சாலை, 20 ம் வார்டுக்கு உட்பட்ட நந்தன் காடு சாலை, 2ம் வார்டுக்கு உட்பட்ட வள்ளி கோடு அம்பலத்துவிளை சாலை, 6ம் வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் சாலை, 11 ஆம் வார்டுக்கு உட்பட்ட கண்ணக்கோடு சாலை ஆகிய 8 ரோடுகள் சிமெண்ட் போட்டு சீரமைப்பதற்கு ரூ.68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இந்தத் திட்டப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மார்த்தாண்டம் பகுதியின் முக்கியமான மைய பகுதி யில்அமைய உள்ளதால் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அழகான நிலையில் வசதியாக அமைக்கப்பட உள்ளது. அனுபவம் வாய்ந்த கட்டடக்கலை பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வணிக வளாகம், வாகன நிறுத்தம், கடைகள் போன்றவை இடம்பெறு கிறது. இதற்கான பணி 2 மாதத்தில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம், நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, அருள்ராஜ், விஜு, ஆட்லின்கெனில், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர திமுக செயலாளர் வினு குமார், குழித்துறை நகர திமுக.இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, திமுக நிர்வாகிகள் ஷாஜி லால், ஜீவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×