கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தூய்மை பணியாளர் காலியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வில் 52 பேர் பங்கேற்புபணி வேண்டாம் என பட்டதாரி பெண் கூறியதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தூய்மை பணியாளர் காலியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் காலி யாக உள்ள 10 தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்தப் பணிக்கு 40 பெண்கள் உட்பட 52 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்கான நேர்முகத் தேர்வு இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்வில் கலந்து கொள்வதற்காக பெண்கள் உள்பட பலரும் வந்திருந்தனர். நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டது.

தூய்மை பணியாள ருக்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்றாலும், பட்டதாரிகளும் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூய்மை பணியாளர்களு க்கான பணி விவரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பட்டதாரி பெண் ஒருவர் தனக்கு இந்த பணி வேண்டாம் என்று கூறி வெளியேறினார். பின்னர் அவர் வெளியே வந்து கண் கலங்கியபடி சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com