search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே ஊர்க்காவல் படை வீரரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    கன்னியாகுமரி அருகே ஊர்க்காவல் படை வீரரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை

    • இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் சிவசுபன் (வயது 28). இவர் ஊர் காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிவசுபன் வீட்டுக்கு வெளியில் வந்து படுத்து தூங்கி உள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்திருந்த சசிகலா நேற்று இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த சிவசுபன் எழுந்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது சசிகலா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி னார்கள்.

    அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×