திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தங்க முலாம் பூசப்பட்ட கும்ப கலச ஊர்வலம்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தங்க முலாம் பூசப்பட்ட கும்ப கலச ஊர்வலம்
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது இன்று நான்காம் நாள் பூஜை நடைபெறுகிறது.

இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முளபூஜை, நாயசாந்திஹோமம், சோர சாந்திஹோமம், ஹோமகலசாபிஷேகங்கள், உச்சபூஜை, ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6-மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு பிம்ப பரிக்கிரகம், ஜலாதிவாசம், அக்ஷஹோமம், குண்ட சுத்திஹோமம் முளபூஜை, அத்தாழ பூஜை, ஆகிய பூஜைகளும் 6.30க்கு தீபாராதனை நடைபெறுகிறது.

திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ குலசேகர பெருமாள் சன்னதிகளில் பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருவனந்த புரம் பாரத கலா ஆர்ட் அக்காடமியின் டாக்டர் பிந்துலெக்ஷ்மியின் கிருஷ்ணகதா நடனம் நடைபெறுகிறது.

கிருஷ்ணன் கோவிலில் தயார் ஆன 7 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ பலி விக்கிரகம் மற்றும் கோவில் விமானத்தில் பொருத்தப்பட வேண்டிய 7 தங்க முலாம் பூசப்பட்ட கும்பகலசங்கள் உபய தாரரிடம் நேற்று மாலை ஆற்றூர் கழுவன் திட்டையில் ஒப்படைக்கபட்டது.

பின்னர் அலங்கரிக் கப்பட்ட வாகனத்தில் சென்டை மேளம் முளங்க முத்துக்குடையுடன் கும்பகலச ஊர்வலம் புறப்பட்டது.

திருவட்டார் பாலம் தபால் நிலைய சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு வழியாக கோவில் மேற்குவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக சாமி சிலைகள் பாலாலய சன்னதியில் இருந்து வந்தது. தற்போது கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி அங்கிருந்த சிலைகள் கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. பாலாலய சன்னதியில் இருந்த சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று சிவன் சன்னதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com