கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா

திரளான பக்தர்கள் பங்கேற்புகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
கோப்பு படம் : கன்னியாகுமரி பகவதி அம்மன் 
கோப்பு படம் : கன்னியாகுமரி பகவதி அம்மன் 
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான புரட்டாசி பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதி காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வ ரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்த னகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12 மணிக்கு அன்னதானமும் நடந்தது.

மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை, உள்படபல வகையானமலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிக ழ்ச்சியும் அதை த்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இத ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com