search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணின் துண்டான கை கட்டை விரலை பொருத்தி மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
    X

    பெண்ணின் துண்டான கை கட்டை விரலை பொருத்தி மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

    • ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டம் நல்லூர் பரமாணிக்க விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவரது மனைவி ஜெயா (45), இவர் கடை நடத்தி வருகிறார், மேலும் இளநீர் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த 22-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவ ருக்கு அரிவாளால் இளநீர் வெட்டும் போது இடது கை கட்டை விரல் துண்டாகி கீழே விழுந்தது. இதனால் ஜெயா துடிதுடித்து போனார். உடனடியாக உறவினர்கள் ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    துண்டான கைவிரலையும் தனியாக கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஐசக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐசக் சுந்தர் சென் தலைமை யிலான டாக்டர் அகமது ரபிக் மீரான் மற்றும் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அடங் கிய மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற் கொண்டனர்.

    அப்போது அவருக்கு துண்டான கை விரலை மீண்டும் சேர்த்து பொருத்தி வைத்து சிகிச்சை அளித்த னர். 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் ஜெயாவின் குடும்பத்தார் டாக்டர் ஐசக் சுந்தர் சென்னு க்கு நன்றி தெரி வித்தனர்.

    இது குறித்து டாக்டர் ஐசக் சுந்தர் சென் கூறியதா வது:-

    பொதுவாக கை மணிக் கட்டு பகுதிகள் துண்டாகி பொருத்தும்போது ரத்த நரம்புகள் பெரிதாக உள்ளதால் இதைவிட எளிதாக இருக்கும் ஆனால் இது கட்டை விரல் என்ப தால் மிகச் சிறிய ரத்த குழாய் களை பொருத்துவது சவா லாக இருந்தது. எனினும் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து கைவிரல் சரி செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×