செல்போன் வாங்கியதில் குறைபாடு - பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு

நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவுஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தர விட்டனர்.
செல்போன் வாங்கியதில் குறைபாடு - பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு
Published on

நாகர்கோவில் :

பள்ளியாடிவிளையை சேர்ந்தவர் மலர் எடிசன். இவர் நாகர்கோவிலில் உள்ள செல்போன் கடையில் ரூ.9,950 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கி னார். வாங்கிய ஒரு வாரத்தி லேயே செல்போன் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து செல்போனை வாங்கி செல்லுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். ஆனால் நுகர்வோர் தான் வாங்கிய செல்போனில் உற்பத்தி குறைபாடு உள்ளதால் வேறு புதிய செல்போன் வேண்டு மென வற்புறுத்தி கேட்டுள் ளார்.

ஆனால் வேறு புதிய செல்போன் கொடுக்க வாய்ப்பில்லை என கடைக் காரர் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் செல்போன் கடையின் சேவை குறை பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை ரூ.9,950 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தர விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com