என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
இரணியல் அருகே கல்லூரி மாணவி மாயம்
- ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே மாங்குழி என்ற இடத்தை சேர்ந்த வர் ரவிராஜ் (வயது48). இவரது மனைவி வளர்மதி (44). இவர்கள் மகள் ரீனாசிங்(19).
வெள்ளி சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்து கொண்டு ரீனாசிங் மாயம் ஆனதாக தெரிகிறது. இது குறித்து அவரது தாயார் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.
Next Story






