search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    கிள்ளியூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.

    கருங்கல் :

    கிள்ளியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு கிள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமாமாலினி தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை மருத்துவமனை பொது மருத்துவர் கணேசன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஸ்டாலின் ஜோஸ்வா, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை மருத்துவர் அனுபாவ், குழந்தைகள் மருத்துவர் அருண் சேம் பிரதீப், கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அஜிஷன், போஸ் பல் மருத்துவர் சுஜாதா குமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

    முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, உப்பு அளவு, காசநோய்க்கான சளி பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய நல செவிலியர் சரஸ்வதி மற்றும் செவிலியர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.

    Next Story
    ×