கேரளாவுக்கு டெம்போவில் செம்மண் கடத்த முயன்று தலைமறைவாக இருந்தவர் கைது

மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கேரளாவுக்கு டெம்போவில் செம்மண் கடத்த முயன்று தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

கொல்லங்கோடு :

கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) அருள்பிர காஷ், சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் கிராத்தூர் பகுதியில் கடந்த 7-ந்தேதி ரோந்து சென்றனர்.

அப்போது கிராத்து ரை அடுத்த கரியறவிளை பகுதியில் ஒரு மினி டெம்போவில் கேரளாவுக்கு செம்மண் கடத்திக் கொண்டு வருவதை பார்த்து டெம்போவை தடுத்து நிறுத்தி னர். அப்போது திடீரென்று ஓட்டுநர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வந்தனர். மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கொல்லங் கோடு போலீஸ் இனெ்ஸ் பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com