search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    X

    இரணியல் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை.

    இரணியல், நவ.11-

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 46). திங்கள்நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கருணாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி, குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். கருணாகரன் மட்டும் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ் மாடியில் அவரது அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் நேற்று இரவு மாடிக்கு சென்று கதவை தட்டி கருணாகரனை அழைத்துள்ளார். கதவு திறக்காததால் கதவை தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கருணாகரன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் கருணாகரன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கருணாகரன் மனைவி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×