search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று 72 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று 72 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை

    • ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருத்த லங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கோவிலில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017 ஆண்டு சுமார் 70 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான தேக்கு மரம் கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அந்தக் கொடி மரத்தில் எண்ணையை ஊற வைத்து கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பாபி ஷேகத்திற்காக 200 கிலோ செம்பு பயன் படுத்தி 42 கலசங்கள் உருவாக்கப்பட்டது.

    இந்த கலசங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட் டது. பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டு வெள்ளியில் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட கருடாழ்வார் சிலையும் செய்யப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டது.

    இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது அதனையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்ட இந்த கொடிமரம் உள்ளது குமரி மாவட்டத்தில் அதிக உயரம் கொண்ட கொடி மரம் இந்த கொடி மரமாகும் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உச்ச பூஜை ஆகிய பூஜைகள் செய்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணமும் அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அத்தாழ பூஜை, அவஸ்சிராவம் தெளித்து ஸ்ரீ பூதபலி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், ஸ்ரீசாஸ்தா கோவில் ஸ்ரீ குலசேகரபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உபதேவன்மார் களுக்கு பிரதிஷ்டையும் நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு கோவிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது இரவு 7 மணிக்கு திருவட்டார் ஆரபி கலாலயம் குழுவி னரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது.

    Next Story
    ×