தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரியில் அதிகாரிகள் அதிரடி சோதனை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகுதி யில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், பிரவீன்ரகு, ரவி ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

மொத்தம் 44 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட் டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 7 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை. இதுபோன்ற ஆய்வுகள் அவ்வப்போது "திடீர்"என்று மேற்கொள் ளப்படும் என்றும் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட புகார் ஏதேனும் பொது மக்கள் தெரிவிக்க விரும்பி னால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், அவர்களு டைய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com