search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை
    X

    தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை

    • சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
    • துறைமுகம் வெறிச்சோடியது

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கட லில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியா குமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியா ன கன்னியாகுமரிமுதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க இன்று முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தை தள மாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது.

    இதனால் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகம்களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. எப் போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தை களும் வெறிச்சோடி கிடக் கின்றன.

    இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த மீன்பிடி தடைக்காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

    இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமை யாக உயர வாய்ப்பு உள்ளது.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னி யாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட சுமார் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மீன வர்கள் வேலை வாய்ப் பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×