search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    பறக்கை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • பறக்கை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் பறக்கைப் பகுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பறக்கை அருகே உள்ள மாவிளை காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் பறக்கை மாவிளை காலணியை சேர்ந்த அர்ஜூன் (வயது 18) என்பதும், மற்றொருவன் பறக்கை செட்டி தெருவை சேர்ந்த சத்தியா (18) என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×