குமரி மாவட்டத்தில் 97.05 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி

மாணவர்களை காட்டிலும் மாணவிகள் சாதனைமாநில அளவில் 7-வது இடத்தை பிடித்தது
குமரி மாவட்டத்தில் 97.05 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி
Published on

நாகர்கோவில் :

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் குமரி மாவட்டம் மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 386 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 21 ஆயிரத்து 725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.05 சதவீதமாகும். மாணவர்கள் 10 ஆயிரத்து 808 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 269 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.01 சதவீதமாகும். மாணவிகள் 11 ஆயிரத்து 578 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 456 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.95 சதவீதமாகும்.

மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 95.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் குமரி மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 56 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 980 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில், 5 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.23 சதவீதம் ஆகும். மாணவர்கள் 3 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 777 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92.23 சதவீதம் ஆகும். மாணவிகள் 2 ஆயிரத்து 969 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 918 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.28 சதவீதமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com