நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'கூட்ஸ் ஷெட்'டை ஆரல்வாய்மொழிக்கு மாற்ற வேண்டும்

ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கைஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் அமைத்துள்ளது. இங்கு வரும் ஒரு கூட்ஸ் ரயில்களில் மட்டும் சுமார் 4000 முதல் 6000 டன் வரை 52 வேகன்களில் உணவு தானிய பொருட்களும் இதர அத்தியாவசிய பொருட் களும் வருகின்றது.

பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகின்றன.

இந்த ரெயில்களில் வரும் சரக்குகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள உணவு தானிய கிடங்குகளில் குறிப் பாக நாகர்கோவிலில் உள்ள வெட்டூர்ணிமடம் மத்திய சேமிப்பு கிடங்கு, கோணம், திங்கள் சந்தை, காப்புக்காடு, உடையார்விளை, ஆரல்வாய் மொழி போன்ற இடங்களில் கொண்டு சென்று சேமித்து வைக்கின்றனர்.

இந்த கூட்ஸ் ஷெட் கோட்டாரில் உள்ளமையால் லாரிகள் நகரினுள் செல்வ தால் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இந்த போக்குவரத்து நெரி சலை தவிர்க்க ஆரல்வாய் மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது. அதன் மிக அருகே 4 வழிச்சாலையும் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் புதிய கூட்ஸ் ஷெட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நாகர்கோவில் நகரில் தற்பொழுதுள்ள போக்கு வரத்து நெரிசல் மிகவும் குறையும்.

மேலும் நாகர்கோவில் கூட்ஸ் ஷெட் வேறு இடத்திற்கு மாற்றியமைக்கும் பொழுது அந்த கூட்ஸ் ஷெட் இடத்தில் புதிதாக ரயில்கள் நிறுத்துவதற்கான கூடுதல் ஸ்டேபிலிங் லைன் கூடுதல் அமைக்கலாம். இதனால் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரும் அனைத்து ெரயில்களும் நிறுத்த போதிய இட வசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆதலால் மேற்படி கூட்ஸ் ஷெட்டை உடனடியாக ஆரல்வாய்மொழி அல்லது டவுண் ரயில் நிலையத்திற்கு மாற்றிட உரிய நடவ டிக்கை எடுக்குமாறு வேண்டு கிறோம் என தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com