search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளா வழியாக செல்லும் கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயிலை நெல்லை வழியாக இயக்க வேண்டும்
    X

    கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் வழி

    கேரளா வழியாக செல்லும் கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயிலை நெல்லை வழியாக இயக்க வேண்டும்

    • ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
    • காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரிலிருந்து அசாம் மாநிலத்தின் திப்ருக ருக்கு இயக்கப்படும் ரெயில் இந்தியாவிலேயே அதிக தூரம் இயக்கப்படும் ரெயில் ஆகும். இந்த ரெயில் 4273 கி.மீ தூரம் பயணம் செய்கிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தின் கேரளா வழியாக இந்த ரெயில் இயக்கப்படுவதால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    வாரத்துக்கு 2 நாள் இயங்கி வந்த இந்த ரெயில் இனி 4 நாள் ரெயிலாக வருகிற மே மாதம் முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் இந்த ரெயில் கன்னியாகுமரி வந்து விட்டு காலி பெட்டிகள் நாகர்கோவில் ரெயில் நிலை யம் கொண்டு வரப்பட்டு பராமரிப்பு செய்யப்படும்.

    பகல் நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி புதிய ரெயில்கள் இயக்க முடியாமல் போகும்.

    மேலும் 2 ஆயிரம் கி.மீ க்கு மேல் இயங்க கூடிய ரெயில்களான கன்னியா குமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹவுரா ரெயில் போன்றவற்றை தினசரி ரெயிலாக இயக்கு தல் போன்ற கோரிக்கை களை நிறை வேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தின் இட நெருக்க டியை சமாளிப்பதற்காக நெல்லை, குமரி ரெயில் நிலை யங்கள் கேரளாவுக்கு ஒடும் ரெயில்களை சுத்தம் செய்யும் நிலையங் களாக மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என்பது வேதனை யானது.

    நாகர்கோவில்-திருவ னந்தபுரம் வழித்தடத்தில் அளவுக்கு அதிகமாக ரெயில்கள் இயக்குவதால் டிராக் நெருக்கடி மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் பிரச்சினை உள்ளது.

    இந்த நிலையை மாற்ற கன்னியாகுமரி- திப்ரூகர் ரெயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ஓர் தினசரி ரெயில் சேவை கூடுதலாக கிடைக்கும்.

    அது மட்டுமல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லவும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல வும் நேரடி ரெயில் சேவை கிடைக்கும்.

    கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் தினசரி ரெயிலாக மாற்றப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாரணாசிக்கு அறிவிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது. தற்போது வாராந்திர ரெயில் தான் இயக்கப்பட உள்ளது.

    இது போன்று குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ள பல்வேறு ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.

    இந்த விஷயத்தில் கன்னியாகுமரி எம்.பி., உடன டியாக தலையீட்டு மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து, கன்னியாகுமரி –-திப்ரூகர் ரெயிலை வழித்தடம் மாற்றம் செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×