search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்
    X

    விஜய்வசந்த் எம்.பி. 

    தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்

    • வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • பாராளுமன்ற நிலைக்குழுவிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை மனு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையங் களின் மேம்பாடு குறித் தும், பயணிகளின் வசதி கள் குறித்து கேட்டறியவும் கன்னியாகுமரிக்கு வருகை தந்த நாடாளுமன்ற ரெயில்வே நிலை குழு உறுப் பினர்களுடன் விஜய்வசந்த் எம்.பி. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஆய்வை மேற் கொண்டார்.

    அப்போது கன்னி யாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் ரெயில்வே கோரிக்கை சம்பந்தமான மனுவினை நாடாளுமன்ற ரெயில்வே நிலைகுழு தலைவர் ராதா மோகனிடம் அவர் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நிலை யில் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக ரெயில்வே சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே அமைச்சகத்திடமும், தென் னக ரெயில்வே அதிகாரிக ளிடமும் எடுத்துக் கூறி வரும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக் கிறது.

    ரெயில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரெயிலை தின சரி ரெயிலாக இயக்க வேண் டும், வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் அதிவிரைவு ரெயிலை குமரி மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கு முன்பிருந்தது போல் குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண் டும். குழித்துறை ரெயில் நிலையத்தை கடந்து செல் லும் வகையில் மேம்பாலம், இரணியல் மற்றும் பள்ளியாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் டவுன் ரெயில் நிலையத்தில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×