search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் முருகன், வள்ளி-தெய்வானைக்கு தெப்பக்குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி
    X

    தெப்பக்குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம் 

    முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் முருகன், வள்ளி-தெய்வானைக்கு தெப்பக்குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த

    27-ந்தேதி கொடி ஏற்றத்து டன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரதீபாராதனையும், பக்தர்களுக்குபிரசாதம் வழங்குதலும்நடந்தது. மாலையில் சமய உரையும், இரவுபஜனையும்நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனிவந்தநிகழ்ச்சிநடந்தது.

    10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை6மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முரு கன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாகசுவாமிக்கும், அம்பாள்விக்ரகங்களுக்கும் பொய்கைதிருக்குளத்தின் கரையில்வைத்துபால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம்களபம், குங்குமம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×