search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளி விழா இன்று தொடங்குகிறது
    X

    அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவுக்கு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமிக்கு அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் அழைப்பு விடுத்தபோது எடுத்தபடம்.

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளி விழா இன்று தொடங்குகிறது

    • புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி- தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும்

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டையொட்டி வெள்ளிவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி, 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பேரின்ப பெரு விழாவாக நடைபெறு கிறது.

    இதில் தேவ ஊழியர்கள் அனிசன், சாமுவேல், எலி யாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி(பெங்களூரு)ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளிக்கி றார்கள். மேலும், ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்துகிறார்கள். அதனைதொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால்தி னகரன் செய்தி அளிக்கிறார்.

    23-ந்தேதி மாலை சரியாக 5.30 மணிக்கு அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் நடத்தும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லகுமார், தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்.

    ம.தி.மு.க அமைப்பு செயலா ளர் துரை வைகோ. எஸ். டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்க ளூரு ராபாட் கிறிஸ்டோபர், எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலைவர் மற்றும் ஐ.ஜே.கே கட்சியினுடைய மாநில தலைவர் ரவி பச்சைமுத்து திரைப்பட இயக்குனர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த். இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை முன்னாள் மற்றும் இன்னாள் பேராயர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறார். தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து பாடகர் கானா பாலா, ரேஷ்மா ராகவேந்திரன் ஆகியோரின் பின்னணி பாடல்களுடன் அமைந்த பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இத்தகவலை அருமனை கிறிஸ்தவ இயக்கசெயலாளர் அருமனை ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×