search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி பிரபல ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது
    X

    கோப்பு படம் 

    ஆரல்வாய்மொழி பிரபல ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

    • முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
    • இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள்

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவாலயம் அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர், கடந்த 16-ந்தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கொலை யாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் ராஜ்குமா ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே சூப் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தி ருப்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக புது குடியிருப்பைச் சேர்ந்த பிரவீன் (23), அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ராம சித்தார்த் (26)ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீ சார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் ராமன் புதுரை சேர்ந்த ஜெபின் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட ஜெபினை ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினார்கள்.

    அப்போது தனது நண்பர் அழைத்ததால் அவருடன் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட ஜெபினை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×