குமரி மாவட்டத்தில் 35 கிலோ ரேசன் அரிசி பெற்று வந்த 14,562 கார்டுகள் தகுதி நீக்கம்

கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல் குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 282 ரேசன் கார்டுகள் உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் 35 கிலோ அரிசி ரேசன் கார்டுகள் தகுதி இழப்பு செய்யப்பட்டு தற்பொழுது அவர்களுக்கு குறைவான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான நபர்களுக்கும் அரசி வழங்குவது நிறுத் தப்பட்டுள்ளது. எந்த அடிப்ப டையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரேசன் கார்டுகள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளது.

இறச்சகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற முறையில் அரிசி வழங்கப்படுகிறது. பழுதான ரேசன் கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய் மொழி சுபாஷ் நகர் பகுதியில் பாலம் அமைக்க ரெயில்வே அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடுத்த கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். துவரங்காடு-தடிக்கா ரன்கோணம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரிப்பா றை பாலப்பணியை விரை வில் தொடங்க வேண்டும் என்றார்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், களியக்கா விளை காவல்கிணறு சாலை சீரமைப்பு பணியை முறையாக நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை பணி மற்றும் பாலப்பணியை முறையாக செய்யாத காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை நேரங்களில் சாலை பணியை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வேளான்துறை திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் மூலம் அவர்கள் பயன் பெற முடியும் என்றார்.

அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 282 ரேசன் கார்டுகள் உள்ளது. 62,266 ரேசன் கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சுமார் 14 ஆயிரத்து 562 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக நபர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து அதிகாரி கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். காவல் கிணறு-பார்வதிபுரம் சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது. பார்வதி புரம்- களியக்கா விளை சாலை வேலைகள் நடந்து வருகிறது. அது தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள் ளது. நான்கு வழி சாலைக்கு இடங்களை கையகப்ப டுத்தியதற்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு சில இடங்களில் வழக்குகள் நடந்து வருகிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com