search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவை குறைபாடு காரணமாக தனியார் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
    X

    கோப்பு படம் 

    சேவை குறைபாடு காரணமாக தனியார் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.

    அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.

    Next Story
    ×