search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
    X

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

    • வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சன்னிதி தெருவில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

    கோவிலை சுற்றியுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அதிகாரிகள் அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்த ரவுப்படி சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 25 கடைகள் அகற்றப்பட்டன.

    இதேபோல் வடக்கு மாட வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×